வாழ்த்துக் கூறியது

595. யாவ ரும்களி சிறக்கவே தருமம்
       எங்கும் என்றும்உள தாகவே
தேவர் இன்னருள் தழைக்கவே முனிவர்
      செய்த வப்பயன் விளைக்கவே.

     (பொ-நி.) களி  சிறக்க!  தருமம் உளதாக! தேவர் அருள் தவப்பயன் விளைக்க! (எ-று.)

     (வி-ம்.) களி- மகிழ்ச்சி.  அருள் - மக்கள்மாட்டு  வைக்கும்  அருள்.
தழைக்க - பெருகுக.  விளைக்க - உயிர்கட்கு நன்மை செய்வதாக.     (124)