கூந்தலியல்பு கூறி விளித்தது

60. களப வண்டலிடு கலச கொங்கைகளின்
     மதிஎ ழுந்துகனல் சொரியுமென்று
அளக பந்திமிசை அளிகள் பந்தரிடும்
   அரிவை மீர்கடைகள் திறமினோ .

     (பொ-நி.)   கொங்கைகளின்  மதி  கனல் சொரியுமென்று;  அளிகள்
அளகபந்திமிசை பந்தரிடும் அரிவைமீர் திறமின்; (எ-று.)

     (வி-ம்.) களபம் - கலவைச் சாந்து. கலசம்-கும்பம். வண்டல் - சேறு.
மதி - நிலா. கனல் சொரியும் - (பிரிந்தார்க்குத்)துன்பம் செய்யும். அளகம்-
கூந்தல்.   பந்தி  -  கட்டு.   அளிகள்  -   வண்டுகள். பந்தர் - பந்தல்;
பந்தலிட்டாற்போல் கூட்டமாக வட்டமிட்டுப் பறந்துநிற்றல். அரிவை-பெண்,
பிரிந்தார்க்கு   மதிகனலைச்   சொரியுமென்று   வண்டுகள்  பந்தரிட்டன
என்றார்.                                                  (40)