காதல் இயல்பு கூறி விளித்தது

65. பேணுங் கொழுநர் பிழைகளெலாம்
     பிரிந்த பொழுது நினைந்துஅவரைக் 
காணும் பொழுது மறந்திருப்பீர்
   கனப்பொற் கபாடந் திறமினோ.

     (பொ-நி.)   கொழுநர்  பிழைகளெலாம்  பிரிந்தபொழுது  நினைந்து, காணும்பொழுது மறந்திருப்பீர் திறமின்; (எ-று.)

     (வி-ம்.) பேணும்  -  அன்புசெய்யும். கொழுநர் - கணவர்.  பிரிவுத்
துன்பத்தால்  பிழை  நினைதலும்  கண்ட  உவகையில்  அது  மறத்தலும்
இயல்பாம்   என்க.  கனம்   -   மேன்மை,   உயர்வு.  பொன் - அழகு;
பொன்னாலியன்ற.  இதனைக் 'காணுங்கால் காணேன் தவறாய காணாக்கால்,
காணேன்  தவறல்  லவை'  எனத்  திருவள்ளுவர்  தந்த  காதலி கூற்றும்
ஒப்புநோக்கத் தக்கது.                                        (45)