கலவி மயக்க நிலை கூறி விளித்தது 67. | நேயக் கலவி மயக்கத்தே | | நிகழ்ந்த மொழியைக் கிளியுரைப்ப வாயைப் புதைக்கும் மடநல்லீர் மணிப்பொற் கபாடம் திறமினோ. |
(பொ-நி.) மொழியைக் கிளி உரைப்ப, வாயைப் புதைக்கும் நல்லீர் திறமின்: (எ-று.)
(வி-ம்.) நேயம் - அன்பு. கலவி -புணர்ச்சி. மொழி சொல். விடத்து பேசிய மொழியைப் பலர்முன் சொன்ன தென்கவாயைப் புதைக்கும் - கிளியின் வாயைப் புதைக்கும் (வியப்பும் அச்சமும் காரணமாகத் தன் வாயைப் புதைத்தாள் எனலுமாம்.)கலவியல் மொழிகளைக் கேட்டிருந்த கிளி பலர் முன் உரைத்ததென்க. இதனை ............கள்ளுலா நறிய கூந்தல் கலவியின் உரைத்த யாவும், கிள்ளைகள் மிழற்றுமாறு கேட்டிள நிலவுகாலும், முள்ளெயி றிலங்கச் செவ்வி முகிழ்நகை கோட்டினாளே' (மணம்புரி:54) என, நைடதத்தும் வருவது ஒப்புநோக்கி மகிழற்பாலது. மொழிகள் கலவிமயக்கத்தே முறைபிறழப்பேசிய சொற்களாகலின் அவற்றை எல்லோருங் கேட்டல் முறையன்றாகலின் வாயைப் புதைக்கலானாள். (47) |