பிரிவாற்றா நிலைகூறி விளித்தது

68. பொங்கு மதிக்கே தினம்நடுங்கிப்
     புகுந்த அறையை நிலஅறைஎன்று
அங்கும் இருக்கப் பயப்படுவீர்
   அம்பொற் கபாடம் திறமினோ.

     (பொ-நி.) மதிக்கு நடுங்கி, அறையை, நிலவறை என்று, அங்கும்
இருக்கப் பயப்படுவீர்; திறமின் (எ-று.)

     (வி-ம்.) பொங்குதல் - நிலவு  காலுதல்.  மதி - நிலா.   அறை-
படுக்கையறை. நிலவறை-நிலத்துள் அமைக்கப்பட்ட வெளிச்சமற்ற அறை.
பிரிவுத்   துன்பத்தால்   உடல்   வெம்பிப்   புழுங்கலின்,  இங்ஙனம்
கூறப்பட்டது.                                             (48)