ஞாயிற்று வணக்கம்

7.பேராழி உலகனைத்தும் பிறங்கவளர் இருள் நீங்க
 ஓராழி தனைநடத்தும் ஒண்சுடரைப் பரவுதுமே.
    
8.பனியாழி உலகனைத்தும் பரந்தகலி யிருள்நீங்கத்
 தனியாழி தனைநடத்தும் சயதுங்கன் வாழ்கவென்றே.

     (பொ-நி.) இருள்  நீங்க,  ஆழி  நடத்தும்  சயதுங்கன்  வாழ்க 
என்று, இருள்நீங்க  ஓராழிதனை நடத்தும் சுடரைப் பரவுதும். (எ-று.)

     (வி-ம்.) ஆழி-கடல், பிறங்க-விளங்க.  ஓராழி-ஒற்றைச் சக்கரத் தேர்.
சுடர்- ஞாயிறு. பனி - குளிர்ச்சி. ஆழி -கடல். பரந்த-பரவிய. கலி-துன்பம்,
ஆழி - ஆணைச்சக்கரம்.  சயதுங்கன்- குலோத்துங்கன். ஈண்டும் ஆட்சிப
்பரப்புக் குறிக்கப்பட்டது.                                    (7. 8)