காட்டின் இயல்பு கூறியது

76. பொரிந்த காரை கரிந்த சூரைபு
     கைந்த வீரையெ ரிந்த வேய்
உரிந்த பாரையெ றிந்த பாலையு
   லர்ந்த வோமைக லந்தவே.

    (பொ-நி) காரை, சூரை,  வீரை, வேய், பாரை, பாலை,  ஓமை கலந்த;
(எ-று.)
 
    
(வி-ம்.) பொரிந்த-பொரிபொரியாய்ப் போன. உரிந்த- பட்டை உரிந்த.
எறிந்த - முறிந்த. கலந்த - கலந்தன. காரை சூரை வீரை முதலிய மரங்கள்
பொரிந்தும் கரிந்தும் புகைந்தும் எறிந்தும் போயினவெனின் அப்பாலையின்
வெம்மையைப் பற்றிக் கேட்கவேண்டாவென்க.                      (2)