நிலஇயல்பு கூறியது 79. | தீய வக்கொடிய கான கத்தரைதி | | றந்த வாய்தொறும்நு ழைந்துதன் சாயை புக்கவழி யாதெ னப்பரிதி தன்க ரங்கொடுதி ளைக்குமே. |
(பொ-நி) பரிதி, சாயை புக்கவழி யாதென, தரைதிறந்த வாய்தொறும் நுழைந்து திளைக்கும்; (எ-று.) (வி-ம்.) தரைதிறந்தவாய்-வெடிப்புகள். சாயை-ஞாயிற்றின் மனைவி. புக்கவழி-புகுந்த இடம். பரிதி-ஞாயிறு. கரம்-கை. ஒளிக்கதிர். திளைத்தல்- தொழிலில் இடைவிடாது பயிலல். ஒருகாலத்தில் சூரியன் மனைவியாகிய சாயை சூரியனை நீங்கிச் சென்றனள் எனவும் சூரியன் அவளைப் பலவிடங்களினுந் தேடித்திரிந்தனன் எனவும் கூறுவர். (5) |