இதுவும் அது 81. | ஆத வம்பருகும் என்று நின்றநிழல் | | அங்கு நின்றுகுடி போனதப் பாத வம்புனல்பெ றாது ணங்குவன பருகும் நம்மையென வெருவியே. |
(பொ-நி.) நின்ற நிழல், பாதவம் நம்மைப் பருகும் என வெருவி, அங்குநின்று குடிபோனது; (எ-று.) (வி-ம்.) ஆதவம் - வெய்யில். நின்ற - மரத்தடியில் நின்ற. அங்கு- மரத்தடி. குடிபோனது - நீங்கிப்போயிற்று. பாதவம் - மரம். புனல் - நீர். உணங்குவன -உலர்வன. மரங்களும் தண்ணீரில்லாமையால் பட்டுப்போய் நிழலற்று நின்றன என்க. (7) |