மான்கள் இயல்பு கூறியது

83. தீயின் வாயின்நீர் பெறினு முண்பதோர்
     சிந்தை கூரவாய் வெந்து வந்துசெந்
நாயின் வாயின்நீர் தன்னை நீரெனா
   நவ்வி நாவினால் நக்கி விக்குமே.

     (பொ-நி.) நவ்வி  -  சிந்தை கூர,  வெந்து,  வந்து நாயின் வாயின்
நீர் தன்னை  நக்கி  விக்கும்; (எ-று)

     (வி-ம்.) தீயின், வாய் - நெருப்பிடை. நீர்பெறினும்-நீர்  கிடைப்பினும்.
ஆய் - ஆகி.    வாயின்  நீர் - வாயினின்று  சொட்டும்  நீர்.  நீர்எனா-
தண்ணீரெனக்    கருதி.   நவ்வி  - மான்.  செந்நாயின்  வாய்நீர்  நக்கத்
தக்கதன்றாகலின் அதனை நக்கிய மானுக்கு விக்கலுண்டாயிற்று.        (9)