நிலத்தின் வெம்மை கூறியது

84. இந்நி லத்துளோர் ஏக லாவதற்கு.
     எளிய தானமோ அரிய வானுளோர்
அந்நி லத்தின்மேல் வெம்மை யைக்குறித்து
   அல்ல வோநிலத்து அடியி டாததே.

     (பொ-நி.) வானுளோர் அடி இடாதது வெம்மையைக் குறித்தல்லவோ; நிலத்துளோர் ஏகல் ஆவதற்கு எளிய தானமோ? (எ-று.)

     (வி-ம்.) ஏகல் ஆவது -ஏகுவது. தானம்-இடம். வானுளோர் -தேவர்.
நிலத்து  அடியிடாதது - பூமிமீது  தம்  கால்களை வைக்காமல் இருப்பது.
கடவுளர்களின்   கானிலந்தோயாமைக்குக்காரணம்  இப்பாலை  நிலத்தின
்கொடுமையே என ஆசிரியர் ஒரு புதுமையான காரணத்தைக் கூறுகிறார்.(10)