மரங்களின் தோற்றம் கூறியது 88. | நிலம்புடைபேர்ந் தோடாமே | | நெடுமோடி நிறுத்தியபேய் புலம்பொடுநின் றுயிர்ப்பனபோல் புகைந்துமரங் கரிந்துளவால். |
(பொ-நி.) நெடுமோடி நிறுத்திய பேய் உயிர்ப்பனபோல் மரம் கரிந்துள; (எ-று.) (வி-ம்.) புடைபெயர்தல் - இடம்விட்டுப் பெயர்தல். நெடு-உயர்ந்த. மோடி - காளி. புலம்பொடு - தனியே. உயிர்த்தல் - மூச்சு விடுதல். உயிர்ப்பனபோல் கரிந்து புகைந்து நிற்கின்றன என்க. (14) |