மணிகள் கிடத்தல் கூறியது 91. | சிதைந்தவுடற் சுடுசுடலைப் பொடியைச் சூறை | | சீத்தடிப்பச் சிதறியவப் பொடியால் செம்மை புதைந்தமணி புகைபோர்த்த தழலே போலும் போலாவேற் பொடிமூடு தணலே போலும். | (பொ-நி.) சூறை, சுடலைப் பொடியைச் சீத்தடிப்ப, அப் பொடியால் புதைந்த மணி தழலேபோலும்; போலாவேல் தணலேபோலும்; (எ-று.) (வி-ம்.) சிதைந்த - உயிர்போய்ச் சிதைந்த. சூறை - சூறாவளி சுழல்காற்று. சீத்து -கிளறி. புதைந்த-மறைந்த. மணி -இரத்தினம். பொடிமூடு தணல் - நீறு பூத்த நெருப்பு. செல்வராயினார் பிணங்களின் மீதுள்ள மணியணிகளைக் கழற்றா தொழிந்தமையின் அம்மணிகள் பலவிடங்களினுங்கிடந்து விளங்கலாயின. (17) |