மூங்கில் முத்துதிர்தல் கூறியது

92. மண்ணோடி அறவறந்து துறந்து அங்காந்த
     வாய்வழியே வேய்பொழியும் முத்தம் அவ்வேய்
கண்ணோடிச் சொரிகின்ற கண்ணீ ரன்றேல்
   கண்டிரங்கிச் சொரிகின்ற கண்ணீர் போலும்

    (பொ-நி.) வேய்  பொழியும்  முத்தம் கண்டு  இரங்கிச் சொரிகின்ற
கண்ணீர் போலும்; (எ-று.)

     (வி-ம்.) ஓடி- வெடிப்பு ஓடி. வறந்து-வறண்டு. துறந்து பிடிப்பு நீங்கி.
அங்காத்தல் - வாய்பிளத்தல். வேய்-மூங்கில். முத்தம்-முத்து. கண்ணோடி-
கண்ணோட்டம்  செய்து;  கணுக்கள்  வெடித்து. கண்டிரங்கி-கண்டு மனம்
இரங்கி;  கண்திரங்கி.  கணுக்கள்  சுருங்கி  எனவும்  கூறலாம். முதிர்ந்த
மூங்கில்களில் முத்துக்கள் உண்டாகி வெடித்து வெளிப்படுதலை இவ்வாறு
பாலைநில வெம்மைக் கிரங்கிக் கண்ணீர் சொரிவதாகக் கற்பித்தார்.  (18)