காற்றின் இயல்பு கூறியது

94.பல்கால்திண் திரைக்கரங்கள்கரையின் மேன்மேற்
       பாய்கடல்கள்நூக்குமது அப்படர்வெங் கானிற்
செல்காற்று வாராமல் காக்க அன்றோ
     திசைக்கரியின் செவிக்காற்றும் அதற்கே யன்றோ.

     (பொ-நி.) கடல்,  திரைக்கரங்களை  நூக்கும்  அது  காற்றுவாராமல்
காக்க  அன்றோ?  கரியின்  செவிக்காற்றும் அதற்கே  அன்றோ? (எ-று.)

     (வி-ம்.) பல்கால் - பலமுறை. திரைக்கரம்-அலையாகிய கை. நூக்குதல்
-தள்ளுதல். திசை-திக்கு. கரி- யானை,  செவிக்காற்று  எழுப்பலும் அதற்கே
என்க. அதற்கு - அதனை  வாராமற்  காக்க. (20)