தோற்றுவாய்

97.ஓதி வந்தஅக் கொடிய கானகத்து
      உறைய ணங்கினுக்கு அயன்வ குத்தவிப்
பூத லம்பழங் கோயில் என்னி்னும்
     புதிய கோயிலுண்டுஅது விளம்புவாம்
 

     (பொ-நி.)   கானகத்து   அணங்கினுக்குப்   பூதலம்  பழங்கோயில்; என்னினும்,  புதிய  கோயில்  உண்டு,  அது  விளம்புவாம்; (எ-று.)

     (வி-ம்.) ஓதிவந்த-சொல்லப்பட்ட. உறைதல்-தங்கியிருத்தல். அணங்கு
-காளி. அயன்-பிரமன். பூதலம்-உலகம்.                            (1)