கோயில் கடைகால் இயல்பு கூறியது

98. வட்ட வெண்குடைச் சென்னி மானதன்
     வாளின் வாயினால் மறலி வாயிடைப்
பட்ட மன்னர்தம் பட்ட மங்கையர்
   பரும ணிக்கருத் திருஇ ருத்தியே.

     (பொ-நி.)   மானதன்    வாளின்    வாயினால்   பட்டமன்னர்தம் மங்கைய(ருடைய)  மணி(யைக்)  கரு(வாக)  இருத்தி; (எ-று.)

     (வி-ம்.) சென்னி-சோழன். மானதன்-குலோத்துங்கன். மறலி- இயமன்.
பட்ட-வீழ்ந்த. பட்டமங்கையர்-பட்டத்துத் தேவியர். மணி-நகைகளிற் பதித்த இரத்தினம். திரு-அழகிய. கரு   இருத்தி- அடித்தளம் அமைத்து.திருக்கரு
இருத்தி என இயைக்க. புதுக்கட்டிடத்திற்குக் கடைகால்  இடுங்கால்  பொன்
மணிகளை இடல் மரபென்க.                                    (2)