கொன்செய்த செழுமணித் திருஊசல் அரமகளிர் கொண்டாட ஆடும்தொறும் குறுமுறுவல் நெடுநிலவு அருந்தும் சகோரமாய்க் கூந்தல்அம் கற்றைசுற்றும் தென்செய்த மழலைச் சுரும்பராய் மங்கைநின் செங்கைப் பசுங்கிள்ளையாய்த் தேவதே வன்பொலிவதும் எவ்உருவு மாம்அவன் திருவுருவின் முறைதெரிப்ப மின்செய்த சாயலவர் மேல்தலத்து ஆடிய விரைப்புனலின் அருவிகுடையும் வெள்ளானை குங்குமச் செஞ்சேறு நாறமட மென்பிடியை அஞ்சிநிற்கும் பொன்செய்த மாடமலி கூடல் பெருஞ்செல்வி பொன்ஊசல் ஆடிஅருளே புழுகுநெய்ச் சொக்கர்திரு அழகினுக்கு ஒத்தகொடி பொன்ஊசல் ஆடிஅருளே |