11

சத்தமாதர்கள்
(வேறு)

கடகளிறு உதவுக பாய்மிசைப் போர்த்தவள்
                கவிகுவி துறுகலின் வாரியைத் தூர்த்தவள்
        கடல்வயிறு எரியஒள் வேலினைப் பார்த்தவள்
                கடிகமழ் தருமலர் தார்முடிச் சேர்த்தவள்

இடியுக அடல் அரி ஏறுஉகைத்து ஆர்த்தவள்
                எழுதரும் முழுமறை நூலினில் கூர்த்தவள்
        எயிறுகொடு உழுதெழு பாரினைப் பேர்த்தவள்
                எனும்இவர் எழுவர்கள் தாள்முடிச் சூட்டுதும்

குடமொடு குடவியர் பாணிகைக் கோத்திடு
                குரவையும் அலதுஒர் பணாமுடிச் சூட்டருள்
        குதிகொள நடமிடும் ஆடலுக்கு ஏற்பஒர்
                குழலிசை பழகளி பாடிடக் கேட்டுஉடை

மடல்அவிழ் துளப நறாஎடுத்து ஊற்றிட
                மழகளிறு எனஎழு கார்முகச் சூல்புயல்
        வரவரும் இளைய குமாரியைக் கோட்டுஎயில்
                மதுரையில் வளர் கவுமாரியைக் காக்கவே
உரை