பரிமளம் ஊறிய உச்சியின் முச்சி பதிந்துஆ டச்சுடர்பொன் பட்டமு டன்சிறு சுட்டியும் வெயிலொடு பனிவெண் நிலவுஆடத் திருநுதல் மீதுஎழு குறுவெயர் வாடத் தெய்வம ணங்கமழும் திருமே னியின்முழு மரகத ஒளிஎண் திக்கும்வி ரிந்துஆடக் கருவிளை நாறு குதம்பை ததும்பிய காது தழைந்துஆடக் கதிர்வெண் முறுவல் அரும்ப மலர்ந்திடு கமலத் திருமுகம்நின் அருள்விழி யொடும்வளர் கருணை பொழிந்திட ஆடுக செங்கீரை அவனி தழைந்திட மவுலி புனைந்தவள் ஆடுக செங்கீரை |