22
சங்குகி டந்தத டங்கைநெ டும்புயல்
                தங்காய் பங்காய்ஓர்
        தமனிய மலைபடர் கொடிஎன வடிவுத
                ழைந்தா ய்எந்தாய்என்று

அங்கண்நெ டும்புவ னங்கள்தொ ழும்தொறும்
                அஞ்சேல் என்றுஓதும்
        அபயமும் வரதமும் உபயமும் உடையஅ
                ணங்கே வெங்கோபக்

கங்குல்ம தம்கயம் மங்குல் அடங்கவி
                டுங்கா மன்சேமக்
        கயல்குடி புகும்ஒரு துகிலிகை எனநின
                கண்போ லும்சாயல்

செங்கயல் தங்குபொ லன்கொடி மின்கொடி
                செங்கோ செங்கீரை
        தெளிதமிழ் மதுரையில் வளரும்ஒ இளமயில்
                செங்கோ செங்கீரை
உரை