37
சேல்ஆட்டு வாள்கண் கருங்கடல் கடைமடை
                திறந்துஅமுதம் ஊற்றுகருணைத்
        தெண்திரை கொழித்துஎறிய வெண்திரை நெருப்பூட்டு
                தெய்வக் குழந்தையைச்செங்

கோல்ஆட்டு நின்சிறு கணைக்கால் கிடத்திக்
                குளிப்பாட்டி உச்சிமுச்சிக்
        குஞ்சிக்கு நெய்போற்றி வெண்காப்பும் இட்டுவளர்
                கொங்கையில் சங்குவார்க்கும்

பாலாட்டி வாய்இதழ் நெரித்துஊட்டி உடலில்
                பசுஞ்சுண்ண மும்திமிர்ந்து
        பைம்பொன் குறங்கினில் கண்வளர்த் திச்சிறு
                பரூஉமணித் தொட்டில்ஏற்றித்

தாலாட்டி ஆட்டுகைத் தாமரை முகிழ்த்துஅம்மை
                சப்பாணி கொட்டிஅருளே
        தமிழொடு பிறந்துபழ மதுரையில் வளர்ந்தகொடி
                சப்பாணி கொட்டிஅருளே
உரை