40
சென்றிடு வாளிகள் கூளிகள் காளிகள்
                ஞாளியில் ஆளிஎனச்
        செருமலை செம்மலை முதலியர் சிந்தச்
                சிந்திட நந்திபிரான்

நின்றிஇலன் ஓடலும் முன்னழ கும்அவன்
                பின்னழ கும்காணா
        நிலவுவி ரிந்திடு குறுநகை கொண்டு
                நெடுங்கயி லைக்கிரியின்

முன்றிலி ன்ஆடல் மறந்துஅம ர்ஆடிஒர
்                 மூரிச் சிலைகுனியா
        முரிபுரு வச்சிலை கடைகுனி யச்சில
                முளரிக் கணைதொட்டுக்

குன்றவி லாளியை வென்ற தடாதகை
                கொட்டுக சப்பாணி
        குடைநிழ லிற்புவி மகளை வளர்த்தவள்
                கொட்டுக சப்பாணி
உரை