சென்றிடு வாளிகள் கூளிகள் காளிகள் ஞாளியில் ஆளிஎனச் செருமலை செம்மலை முதலியர் சிந்தச் சிந்திட நந்திபிரான் நின்றிஇலன் ஓடலும் முன்னழ கும்அவன் பின்னழ கும்காணா நிலவுவி ரிந்திடு குறுநகை கொண்டு நெடுங்கயி லைக்கிரியின் முன்றிலி ன்ஆடல் மறந்துஅம ர்ஆடிஒர ் மூரிச் சிலைகுனியா முரிபுரு வச்சிலை கடைகுனி யச்சில முளரிக் கணைதொட்டுக் குன்றவி லாளியை வென்ற தடாதகை கொட்டுக சப்பாணி குடைநிழ லிற்புவி மகளை வளர்த்தவள் கொட்டுக சப்பாணி |