42
செழுமறை தெளியவ டித்தத மிழ்ப்பதி கத்தோடே
                திருஅருள் அமுதுகு ழைத்துவி டுத்தமு லைப்பாலால்
        கழுமல மதலைவ யிற்றைநி ரப்பிம யில்சேயைக்
                களிறொடும் வளரவ ளர்த்தஅ ருள்செவி லித்தாயே

குழல்இசை பழகிமு ழுப்பிர சத்துஇர சத்தோடே
                குதிகொளும் நறியக னிச்சுவை நெக்கபெ ருக்கேபோல்
        மழலையின் அமுதுஉகு சொற்கிளி கொட்டுக சப்பாணி
    மதுரையில் வளரும் மடப்பிடி கொட்டுக சப்பாணி
உரை