5

முருகக்கடவுள்
(வேறு)

பமரம் அடுப்பக் கடாம்எடுத்து ஊற்றும்ஓர்
                பகடு நடத்திப் புலோமசைச் சூற்புயல்
        பருகி யிடக்கற் பகாடவிப் பாற்பொலி
                பரவை இடைப்பத்ம மாதுஎனத் தோற்றிய

குமரி இருக்கக் கலாமயில் கூத்துஅயர்
                குளிர்புனம் மொய்த்திட் டசாரலில் போய்ச்சிறு
        குறவர் மகள்குச் சலாமிடல்கு ஏக்கறு
                குமரனை முத்துக் குமாரனைப் போற்றுதும்

இமிழ்திரை முற்றத் துமேருமத்து ஆர்த்துமுள்
                எயிறுகு நச்சுப் பணாடவித் தாப்பிசைத்து
        இறுக இறுக்கித் துழாய்முடித் தீர்த்தனொடு
                எவரும் மதித்துப் பராபவத் தீச்சுட

அமுதுசெய் வித்திட் ட போனகத் தால்சுடர்
                அடரும் இருட்டுக் கிரீவமட்டு ஆக்கிய
        அழகிய சொக்கற்கு மால்செயத் தோட்டுஇகல்
                அமர்செய் கயல்கண் குமாரியைக் காக்கவே
உரை