53
அஞ்சிலம்பு ஓலிட அரிக்குரல் கிண்கிணி
                அரற்றுசெஞ் சீறடிபெயர்த்து
        அடிஇடும் தொறும்நின் அலத்தகச் சுவடுபட்டு
                அம்புவி அரம்பையர்கள் தம்

மஞ்சு துஞ்சு அளகத்து இளம்பிறையும் எந்தைமுடி
                வளர்இளம் பிறையும்நாற
        மணிநூ புரத்துஅவிழும் மென்குரற் கோஅசையும்
                மடநடைக் கோதொடர்ந்துஉன்

செஞ்சிலம்பு அடிபற்று தெய்வக் குழாத்தினொடு
                சிறைஓதி மம்பின்செலச்
        சிற்றிடைக்கு ஒல்கிமணி மேகலை இரங்கத்
                திருக்கோயில் எனஎன்நெஞ்சக்

கஞ்சமும் செஞ்சொல் தமிழ்க்கூட லும்கொண்ட
                காமர்பூங் கொடிவருகவே
        கற்பக அடவியில் கடம்பாடு அவிர்பொலி
                கயல்கண்நா யகிவருகவே
உரை