64
குலத்தோடு தெய்வக் குழாம்பிழிந்து ஊற்றிக்
                குடித்துச் சுவைத்துஉமிழ்ந்த
        கோதுஎன்றும் அழல்விடம் கொப்பளிக் கின்றஇரு
                கோளின்உச் சிட்டம்என்றும்

கலைத்தோடு மூடிக் களங்கம் பொதிந்திட்ட
                கயரோகி என்றும் ஒருநாள்
        கண்கொண்டு பார்க்கவும் கடவதுஅன்று எனவும்
                கடல்புவி எடுத்துஇகழவிண்

புலத்தோடும் உடுமீன் கணத்தோடும் ஓடும்நின
்                 போல்வார்க்கு மாபாதகம்
        போக்கும்இத் தலம்அலது புகல்இல்லை காண்மிசைப்
                பொங்குபுனல் கற்பகக்காடு

அலைத்தோடு வைகைத் துறைப்படி மடப்பிடியொடு
                அம்புலீ ஆடவாவே
        ஆணிப்பொன் வில்லிபுணர் மாணிக்க வல்லியுடன்
                அம்புலீ ஆடவாவே
உரை