குலத்தோடு தெய்வக் குழாம்பிழிந்து ஊற்றிக் குடித்துச் சுவைத்துஉமிழ்ந்த கோதுஎன்றும் அழல்விடம் கொப்பளிக் கின்றஇரு கோளின்உச் சிட்டம்என்றும் கலைத்தோடு மூடிக் களங்கம் பொதிந்திட்ட கயரோகி என்றும் ஒருநாள் கண்கொண்டு பார்க்கவும் கடவதுஅன்று எனவும் கடல்புவி எடுத்துஇகழவிண் புலத்தோடும் உடுமீன் கணத்தோடும் ஓடும்நின ் போல்வார்க்கு மாபாதகம் போக்கும்இத் தலம்அலது புகல்இல்லை காண்மிசைப் பொங்குபுனல் கற்பகக்காடு அலைத்தோடு வைகைத் துறைப்படி மடப்பிடியொடு அம்புலீ ஆடவாவே ஆணிப்பொன் வில்லிபுணர் மாணிக்க வல்லியுடன் அம்புலீ ஆடவாவே |