68
முன்புஉம்பர் அரசுசெய் பெரும்பாவ மும்போக
                மூரிமாத் தொடர்சா பமும்
        மும்மைத் தமிழ்ச்செழியன் வெப்பொடு கொடுங்கூனும்
                மோசித்த இத்த லத்தின்

தன்பெருந் தன்மையை உணர்ந்திலைகொல் சிவராச
                தானியாய்ச் சீவன் முத்தித்
        தலமுமாய்த் துவாதசாந் தத்தலமும் ஆனதுஇத்
                தலம்இத் தலத்து அடைதியேல்

மன்பெருங் குரவன் பிழைத்தபா வமும்மற்றை
                மாமடிகள் இடுசா பமும்
        வளர்இளம் பருவத்து நரைதிரையும் முதிர்கூனும்
                மாற்றிடப் பெறுதி கண்டாய்

அன்பர்என்பு உருகக் கசிந்திடு பசுந்தேனொடு
                அம்புலீ ஆட வாவே
        ஆணிப்பொன் வில்லிபுணர் மாணிக்க வல்லியுடன்
                அம்புலீ ஆட வாவே
உரை