கும்பம் சுமந்தமத வெள்ளநீர் கொட்டும் கொடுங்களிறு இடும்போர் வையான் குடிலகோ டீரத்து இருந்துகொண்டு அந்நலார் கொய்தளிர்க் கைவ ருடவும் செம்பஞ்சு உறுத்தவும் பதைபதைத்து ஆரழல் சிகைஎனக் கொப்ப ளிக்கும் சீறடிகள் கன்றிச் சிவந்திடச் செய்வதும் திருவுளத்து அடையா துபொன் தம்பம் சுமந்துஈன்ற மானுட விலங்கின் தனிப்புதல்வ னுக்கு வட்டத் தண்குடை நிழற்றுநினை வம்என அழைத்தனள் தழைத்திடு கழைக்க ரும்புஒன்று அம்புஅஞ் சுடன்கொண்ட மகரக் கொடிக்கொடியொடு அம்புலீ ஆட வாவே ஆணிப்பொன் வில்லிபுணர் மாணிக்க வல்லியுடன் அம்புலீ ஆட வாவே |