துளிதூங்கு தெள்அமுத வெள்அருவி பொழியும்நின் தொன்மரபு தழைய வந்து தோன்றிடும் கௌரியர் குலக்கொழுந் தைக்கண்டு துணைவிழியும் மனமும் நின்று களிதூங்க அளவளாய் வாழாமல் உண்அமுது கலையொடும் இழந்து வெறுமண் கலத்திடு புதுக்கூ ழினுக்குஇரவு பூண்டுஒரு களங்கம்வைத் தாய்இ துஅலால் ஒளி தூங்கு தெளிவிசும் பினின்நின்னொடு ஒத்தவன் ஒருத்தன் கரத்தின் வாரி உண்டுஒதுக் கியமிச்சில் நள்இருளில் அள்ளிஉண்டு ஓடுகின் றாய்என் செய்தாய் அளிதூங்கு ஞிமிறுஎழுந்து ஆர்க்குங் குழல்திருவொடு அம்புலீ ஆட வாவே ஆணிப்பொன் வில்லிபுணர் மாணிக்க வல்லியுடன் அம்புலீ ஆட வாவே |