மழைக்கொந் தளக்கோதை வம்மின்என் றுஅளவில்நீ வந்திலை எனக்க டுகலும் வாள்முகச் செவ்விக்கு உடைந்துஒதுங் கின்அவன்எதிர் வரஒல்கி யோபணி கள்கோள் இழைக்கும்கொல் பின்தொடர்ந்து எனஅஞ்சி யோதாழ்த்து இருந்தனன் போலும் எனயாம் இத்துணையும் ஒருவாறு தப்புவித் தோம்வெகுளில் இனிஒரு பிழைப்புஇல்லை காண் தழைக்கும் துகில்கொடி முகில்கொடி திரைத்துமேல் தலம்வளர் நகில்கொ டிகளைத் தாழ்குழலும் நீவிநுதல் வெயர்வும் துடைத்துஅம்மை சமயம்இது என்று அலுவலிட்டு அழைக்கும் தடம்புரிசை மதுரைத் துரைப்பெணுடன் அம்புலீ ஆட வாவே ஆணிப்பொன் வில்லிபுணர் மாணிக்க வல்லியுடன் அம்புலீ ஆட வாவே |