ஏடுஅகத்து எழுதாத வேதச் சிரத்துஅரசு இருக்கும்இவள் சீறடி கள்நின் இதயத் தடத்தும் பொலிந்தவா திருஉளத்து எண்ணிஅன் றேக படமா நாடகத்து ஐந்தொழில் நடிக்கும் பிரான்தெய்வ நதியொடு முடித்தல் பெற்றாய் நங்கைஇவள் திருஉளம் மகிழ்ச்சிபெறில் இதுபோலொர் நற்றவப் பேறுஇல் லைகாண் மாடகக் கடைதிரித்து இன்னரம் பார்த்துஉகிர் வடிம்புதை வரும்அந் நலார் மகரயாழ் மழலைக்கு மரவங்கள் நுண்துகில் வழங்கக் கொழுங்கோங் குதூங்கு ஆடகப் பொற்கிழி அவிழ்க்கும்மது ரைத்திருவொடு அம்புலீ ஆட வாவே ஆணிப்பொன் வில்லிபுணர் மாணிக்க வல்லியுடன் அம்புலீ ஆட வாவே |