75
கள்ஊறு கஞ்சக் கரத்துஊறு சேஒளி
                கலப்பச் சிவப்புஊறியும்
        கருணைப் பெருக்கூற அமுதூறு பார்வைக்
                கடைக்கண் கறுப்புஊறியும்

        நள்ளூறு மறுவூறு அகற்றுமுக மதியில்வெண்
                நகையூறு நிலவூறியும்
        நல்தரள அம்மனையொர் சிற்குணத் தினைமூன்று
                நற்குணம் கதுவல் காட்ட

உள்ஊறு களிதுளும் பக்குரவர் இருவீரும்
                உற்றிடு துவாதசாந்தத்து
        ஒருபெரு வெளிக்கே விழித்துஉறங் கும்தொண்டர்
                உழுவல்அன்பு என்புஉருகநெக்கு

அள்ளூற உள்ளே கசிந்தூறு பைந்தேறல்
                அம்மானை ஆடிஅருளே
        ஆகம் கலந்துஒருவர் பாகம் பகிர்ந்தபெண்
                அம்மானை ஆடிஅருளே
உரை