தமரான நின்துணைச் சேடியரில் ஒருசிலர் தடக்கையின் எடுத்துஆடுநின் தரளஅம் மனைபிடித்து எதிர்வீசி வீசிஇட சாரிவல சாரிதிரியா நிமிராமுன் அம்மனையொர் ஆயிரம் எடுத்துஎறிய நிரைநிரைய வாய்க்ககனமேல் நிற்கின்ற தம்மைநீ பெற்ற அகி லாண்டமும் நிரைத்துவைத் ததுகடுப்ப இமிரா வரிச்சுரும்பு ஆர்த்தெழப் பொழிலூடு எழுந்தபைந் தாதுஉலகெலாம் இருள்செயச் செய்துநின் சேனாபராகம் எனும் ஏக்கம்அள காபுரிக்கும் அமரா வதிக்கும்செய் மதுரா புரித்தலைவி அம்மானை ஆடிஅருளே ஆகம் கலந்துஒருவர் பாகம் பகிர்ந்தபெண் அம்மானை ஆடிஅருளே |