உயிராய் இருக்கின்ற சேடியரின் மலர்மீது உதித்தவள் எதிர்த்துநின்னோடு ஒட்டிஎட் டிப்பிடித் திட்டஅம் மனைதேடி ஓடிஆ டித்திரியநீ பெயராது இருந்துவிளை யாடுவது கண்டுஎந்தை பிறைமுடி துளக்கமுடிமேல் பெருகுசுர கங்கை நுரை பொங்கல்அம் மானைஅப் பெண்கொடியும் ஆடல்மான வெயரா மனம்புழுங் கிடும்அமரர் தச்சனும் வியப்பச் செயும்தவளமா மேடையும் தண்தரள மாடமும் தெள்நிலா வீசத் திசைக்களிறுஎலாம் அயிரா வதத்தினை நிகர்க்கும்மது ரைத்தலைவி அம்மானை ஆடிஅருளே ஆகம் கலந்துஒருவர் பாகம் பகிர்ந்தபெண் அம்மானை ஆடிஅருளே |