80
விளரிமி ழற்றுஅருளி குமிறுகு ழல்கொடி
                வீசிய அம்மனைபோய்
        விண்ணில் நிரைத்தெழு வதுகக னந்திரு
                மேனிய தானவருக்கு

இளநிலவு உமிழ்பரு முத்தின் கோவை
                எடுத்துஅவர் திருமார்புக்கு
        இடுவ கடுப்பவும் அப்பரி சேபல
                மணியின் இயற்றியிடும்

வளர்ஒளி விம்மிய அம்மனை செல்வது
                வானவில் ஒத்திடவும்
        மனன்நெக்கு உருகப் பரமா னந்தம்
                மடுத்த திருத்தொண்டர்க்கு

அளிகனி யத்திரு அருள்கனி யும்கனி
                ஆடுக அம்மனையே
        அழகு தழைந்தகல் யாண சவுந்தரி
                ஆடுக அம்மனையே
உரை