82
ஒள்ஒளி மரகத மும்முழு நீலமும்
                ஒண்தர ளத்திரளும்
        ஒழுகுஒளி பொங்க இழைத்திடும் அம்மனை
                ஒருமூன்று அடைவில்எடாக்கள்

அவிழ் கோதை விசும்புற வீசுவ
                கண்நுதல் பால்செலநின்
        கையில் வளர்த்த பசுங்கிளி யும்வளர்
                காமர் கருங்குயிலும்

பிள்ளைவெள் ஓதிம மும்முறை முறையால்
                பெருகிய காதலைமேல்
        பேச விடுப்ப கடுப்ப அணைத்துஒரு
                பெடையோடு அரசஅனம்

அள்ளல் வயல்துயில் மதுரைத் துரைமகள்
                ஆடுக அம்மனையே
        அழகு தழைந்தகல் யாண சவுந்தரி
                ஆடுக அம்மனையே
உரை