பண்நாறு கிளிமொழிப் பாவைநின் திருமேனி பாசொளி விரிப்பஅம்தண் பவளக் கொடிக்காமர் பச்சிளங் கொடியதாய்ப் பருமுத்த மரகதம்அதாய்த் தண்நாறும் மல்லல் துறைச்சிறை அனம்களி தழைக்கும் கலாமஞ்ஞையாய்ச் சகலமும் நின்திருச் சொருபம்என்று ஓலிடும் சதுர்மறைப் பொருள்வெளியிடக் கள்நாறு குழலியர் குடக்கொங்கை பொங்குசெங் களபமும் கத்தூரியும் கப்புரமும் ஒக்கக் கரைத்துஓடி வாணியும் காளிந்தி யும்கங்கையாம் விண்ஆறும் அளவளாய் விளையாடு புதுவைகை வெள்ளநீர் ஆடி அருளே விடைக்கொடி யவர்க்குஒரு கயல்கொடி கொடுத்த வெள்ளநீர் ஆடிஅருளே கொடி |