87
துளிக்கும் பனித்திவலை சிதறிக் குடைந்துஆடு
                துறையில் துறைத்தமிழொடும்
        தொன்மறை தெளிக்கும் கலைக்கொடி எனும்துணைத்
                தோழிமூழ் கிப்புனல்மடுத்து

ஒளிக்கும் பதத்துமற்று அவள்என அனப்பேடை
                ஓடிப் பிடிப்பதுஅம்மை
        ஒண்பரி புரத்தொனியும் மடநடையும் வௌவினது
                உணர்ந்துபின் தொடர்வதுஏய்ப்ப

நெளிக்கும் தரங்கத் தடம்கங்கை உடன்ஒட்டி
                நித்திலப் பந்துஆடவும்
        நிரைமணித் திரளின் கழங்குஆட உந்தன்
                நெடுந்திரைக் கைஎடுத்து

விளிக்கும் பெருந்தண் துறைக்கடவுள் வைகைநெடு
                வெள்ளநீர் ஆடிஅருளே
        விடைக்கொடி யவர்க்குஒரு கயல்கொடி கொடுத்தகொடி
                வெள்ளநீர் ஆடிஅருளே
உரை