இழியும் புனல்தண் துறைமுன்றில் இதுஎம் பெருமான் மண்சுமந்த இடம்என்று அலர்வெண் கமலப்பெண் இசைப்பக் கசிந்துஉள் உருகிஇரு விழியும் சிவப்ப ஆனந்த வெள்ளம் பொழிந்து நின்றனையால் மீண்டும் பெருக விடுத்தவற்குஓர் வேலை இடுதல் மிகைஅன்றே பிழியும் நறைக்கற் பகம்மலர்ந்த பிரச மலர்ப்பூந் துகள்மூழ்கும் பிறைக்கோட்டு அயிரா வதம்கூந்தல் பிடியோடு ஆடத் தேன்அருவி பொழியும் பொழில்கூ டலில்பொலிவாய் புதுநீர் ஆடி அருளுகவே பொருநைத் துறைவன் பொற்பாவாய் புதுநீர் ஆடி அருளுகவே |