தேர்க்கோல மொடுநின் திருக்கோல மும்கண்டு சிந்தனை புழுங்குகோபத்தீ அவிய மூண்டெழும் காமா னலம்கான்ற சிகைஎன எழுந்துபொங்கும் தார்க்கோல வேணியர்தம் உள்ளம்என வேபொன் தடம்சிலையும் உருகிஓடத் தண்மதி முடித்ததும் வெள்விடைக்கு ஒள்மணி தரித்ததும் விருத்தமாகக் கார்க்கோல நீலக் கருங்களத்தோடு ஒருவர் செங்களத்து ஏற்றுஅலமரக் கண்கணை துரக்கும் கரும்புருவ வில்லொடுஒரு கைவில் குனித்துநின்ற போர்க்கோல மேதிரு மணக்கோலம் ஆனபெண் பொன்ஊசல் ஆடிஅருளே புழுகுநெய்ச் சொக்கர் திரு அழகினுக்கு ஒத்தகொடி பொன்ஊசல் ஆடிஅருளே |