பூம

            பூமா திருக்கும் பசுங்களபப்
                புயயூ தரத்துப் புருகூதன்
            போற்றக் ககன வெளிமுகட்டுப்
                புத்தேள் பரவப் பொதிகைமலைக்

            கோமா முனிக்குத் தமிழுரைத்த
                குருதே சிகனைக் குரைகடற்குக்
                குடக்கே குடிகொண் டிருந்தசெந்திற்
                குமரப் பெருமான் தனைக்காக்க

            தேமா மலர்ப்பொற் செழும்பொகுட்டுச்
                செந்தா மரையில் வீற்றிருக்குந்
            தேவைப் படைத்துப் படைக்குமுதல்
                சேரப் படைத்துப் படைக்கும்உயிர்

            ஆமா றளவுக் களவாகி
                அனைத்துந் தழைக்கும் படிகருதி
            அளிக்கும் படிக்குத் தனியேசங்
                காழி படைத்த பெருமாளே.