விரைத்த டம்பொழில் வரைமணி ஆசனத்
            திருந்துவிண் ணவர்போற்றி

        வரைத்த டம்புரை மழவிடை எம்பிரான்
            மனமகிழ்த் திடவாக்கால்

        இரைத்த பல்கலைப் பரப்பொலாந் திரட்டிமற்
            றிதுபொரு ளெனமேனாள்

        உரைத்த தேசிகா செந்தில்வாழ் கந்தனே
            உருட்டுக சிறுதேரே

        உரக நாயகன் பஃறலை பொடிபட
            உருட்டுக சிறுதேரே.