மாதுநாயகம் எனைவடி வுடையசீர்
வள்ளிநா யகமண்ணில்

ஈது நாயகம் எனவுனை யன்றிவே
றெண்ணநா யகம்உண்டோ

போது நாயகன் புணரியின் நாயகன்
பொருப்புநா யகன்போற்றி

ஓது நாயக செந்தில்வாழ் கந்தனே
உருட்டுக சிறுதேரே

உரக நாயகன் பஃறலை பொடிபட
உருட்டுக சிறுதேரே.