New Page 1

        வெங்காள கூடவிடம் ஒழுகுபற் பகுவாய்
            விரித்துமா சுணம் உமிழ்ந்த
        வெங்கதிர் மணிக்கற்றை ஊழியிரு ளைப்பருக
            வேய்முத் துதிர்ந்து சொரியக்

        கங்காளர் முடிவைத்த கங்கா நதிக்கதிர்
            கடுப்பக் குறுங்க வைக்காற்
        கவரியின் பருமுலைக் கண்திறந் தொழுகுபால்
            கதிர்வெயிற் படமு ரிந்து

        மங்காமல் இரசதத் தகடெனச் சுடர்விட
            மலைக்குறவர் கண்டெ டுத்து
        வண்தினைக் கெருவிடுஞ் சாரலிற் கரியகுற
            மகளிருளம் ஊச லாடச்

        செங்காவி விழுபருகு பன்னிருகை மேகமே
            செங்கீரை யாடி யருளே
        திரையெறியும் அலைவாய் உசுந்தவடி வேலனே
            செங்கீரை யாடி யருளே.