கறைகொண்ட முள்ளெயிற் றுத்துத்தி வரியுடற்
            கட்செவிப் பஃற லைநெடுங்
        காகோ தரச்சிர நெளிக்கவட பூதரங்
            கால்சாய மகரம் எறியுந்

        துறைகொண்ட குண்டகழ்ச் சலராசி யேழுஞ்
            சுறுக்கெழ முறுக்கெ யிற்றுச்
        சூரன் பயங்கொளச் சந்த்ரசூ ரியர்கள்செந்
            தூளியின் மறைந்தி டத்திண்

        பொறைகொண்ட சுரர்மருவும் அண்டகோ ளகைமுகடு
            பொதிரெறிய நிருதர் உட்கப்
        பூச்சக்ர வாளகிரி கிடுகிடென வச்சிரப்
            புருகூதன் வெருவி வேண்டுந்

        திறைகொண்ட ளக்கவரு மயிலேறு சேவகா
            செங்கீரை யாடியருளே
        திரையெறியும் அலைவாய் உகந்தவடி வேலவனே
            செங்கீரை யாடி யருளே.