ஏர

        ஏர்கொண்ட பொய்கைதனில் நிற்குமொரு பேரரசின்
            இலைகீழ் விழின்ப றவையாம்
        இதுநிற்க நீர்விழின் சுயலாமி தன்றியோர்
            இலையங்கு மிங்கு மாகப்

        பார்கொண்ட பாதியும் பறவைதா னாகஅப்
            பாதியுஞ் சேல தாகப்
        பார்கொண்டி ழுக்கஅது நீர்கொண் டிழுக்கவிப்
            படிகண்ட ததிச யமென

        நீர்கொண்ட வாவிதனில் நிற்குமொரு பேழ்வாய்
            நெடும்பூதம் அதுகொண் டுபோய்
        நீள்வரை யெடுத்ததன் கீழ்வைக்கும் அதுகண்டு
            நீதிநூல் மங்கா மலே

        சீர்கொண்ட நக்கீர னைச்சிறை விடுத்தவா
            செங்கீரை யாடி யருளே
        திரையெறியும் அலைவாய் உகந்தவடி வேலனே
            செங்கீரை யாடி யருளே.