உடல

        உடல்வளை குழவி மதியமும் நதியும்
            உரகமும் ஒழுகு செஞ்சடைக் காட்டினர்
        உமைமுலை குழைய மருவிய புனிதர்
            உரைகொடு பரவு தொண்டரைக் காத்தவர்
        உமிழ்திரை மகர சலதியில் விளையும்
            உறுவிட வடவை கண்டமட் டேற்றினர்
        உடைமணி கனக பரிபுர முரல
            ஒருமுறை பவுரி கொண்டமெய்க் கூத்தினர்

        வடவரை முதுகு நெளிநெளி நெளிய
            வரிசிலை யெனவொர் அம்பினைக் கோத்தவர்
        மறுவறு முழுவெண் நிலவெழு முறுவல்
            வளரொளி இருள்வ னங்கெடப் பூத்தவர்
        மருவிய சகள வடிவினர் அரிய
            வடகலை தமிழ்வ ளம்பெறச் சேர்த்தவர்
        மதுரையில் இறைவர் இரசத பொதுவர்
            மணமலி பதயு கங்களைப் போற்றுதும்

        இடவிய மதுர வரியளி குமுறி
இடறிய களப குங்குமத் தூட்பொதி
இமசலம் உழுகு கனகன விரகம்
எழுகுற வனிதை சிந்தையிற் சேர்ப்பனை
இடிபடு முரச முழவுடன் அதிர
எதிர்பொரு நிருதர் தம்படைப் போர்க்களம்
இடமற முதிய கழுதுகள் நடனம்
இடவடல் புரியு மொய்ம்பனைத் தூற்றிய

கடதட வழுவை முகமுள கடவுள்
கருணையின் முதிய தம்பியைப் பார்ப்பதி
கரமலர் அணையில் விழிதுயில் மருவி
களிபெறு குதலை மைந்தனைப் பூப்பயில்
கடிகமழ் தருவின் இறைமகள் புதிய
கலவியின் முழுகு கொண்களைப் போற்றிசெய்
கலைமகள் பரவு குமரனை மதுர
கவிதரு குரிசில் கந்தனைக் காக்கவே.