குறுமுகை விண்ட நெட்டிலைத் தாழை
அடியில்வி ளைந்த முட்குடக் காயில்-இனிய
குவளை யோடையில் விண்தோ யுந்தேவர்
குணலைபு ரிந்த கற்பகச் சோலை
நிழலிடு பந்த ரிட்ட பொற்றூணில் - அளவர்
குடிலில் வாசலில் நின்றோடுந் தோணி
குழுவொடு வந்து விட்டிளைப் பாறு
துறைமணல் வண்ட லிடடுவற் றாத - பழைய
குமிழி வாலியில் வண்டா னந்தாவுங்
குரவுநெ ருங்கும் எக்கரிற் கானல்
உழுநர்ப ரம்பின் நெற்குலைத் தாளில்-இளைய
குமரர் ஊர்சிறு திண்டேர் மென்காவில்
இறுகுகு ரும்பை யொத்தபொற் பார
நகிலரி ருந்து வைத்தவைப் பூசல்-அருகில்
இளைஞர் ஊடலில் வண்டார் தண்டாரில்
எவரும கிழ்ந்த சித்திரச் சாலை
நிழன்மணி துன்று தெற்றியில் தேவர்-மகுடம்
இடறு பூழியில் வங்கா ளஞ்சீனம்
எனமொழி தங்கும் அற்புதத் தீவில்
வணிகரின் வந்த மிக்கபட் டாடை-வகையில்
ஏறியும் ஆரவடம்பூ ணும்பூணில்
இரைகவர் ஞெண்டு முக்குளித் தூறும்
அளறுகி டங்கில் வித்துவித் தாரத்-துரவில்
இடுமுள் வேலியில் வெங்கா மன்காண
முறுகவி ளைந்து முற்றி முத்தேறு
கரியக ரும்பு சுற்றுசிற் றாலை-நிலையின்
முதிய தாழியில் வெந்தா றும்பாகின்
முடியைவி ளம்பி வைத்துமுட் டாது
கடைசிதர் கின்ற கட்குடப் பானை-முதுகின்
முளைகொள் சாலியின் மென்பூ கந்தோறு
முருகுது ளும்பு கொத்துடைப் பாளை
சிதறியு திர்ந்த பித்திகைப் பீட-மறுகின்
முதல்வர் தேவியர் பந்த டூங்காவின்
முனிவர்வி ரும்பு கற்புடைப் பான்மை
மகளிர்கள் மொண்டெ டுத்தகைச் சாலின்-மடுவில்
முழுது மேதியில் வம்பே செஞ்சேல்பாய்
செறுவில்வி ளைந்த நெற்குலைக் காயில்
உழவிலு டைந்த கட்டியிற் பார-மதகு
செறியும் ஏரியின் மண்டு கம்பானல்
செருமிமு ழங்கு கற்பிளப் பான
புடையின்வி ழும்பு னற்பெருக் கான-தமர
திமிர வாவியி லெங்கே யுந்தாவுந்
திரையில் வலம்பு ரிக்கணத் தோடு
பணிலமு ழங்கு பட்டினக் காவல்-திகிரி
முருக வேலவ செங்கோ செங்கீரை
தினகரர் அஞ்ச விட்புலத் தேவர்
மகபதி முன்கு வித்த வித்தார-மவுலி
திறைகொள் சேவக செங்கோ செங்கீரை
|