மங

        மங்கல மங்கல நூல் எங்குமொ ழிந்தனர்காண்
            வானோர் ஏனோர்போய்
        வந்துவ ணங்கினர்மேல் அந்தர துந்துபிகேள்
            வாரு டாடாதே.

        கொங்கைசு மந்திடைநூ லஞ்சும் அணங்கனையார்
            கூடா ஊடாரோ
        கொண்டவ ரந்தருவாய் அண்டர்பெ ருந்தவமே
            கோமான் ஆமாநீ

        செங்கமலந்தனிலே பைங்குமு தங்களிலே
            சேல்பாய் வானாடா
        தென்றலு டன்றமிழ்தேர் தென்பொதி யம்பயில் வாழ்
            தேனார் தார்மார்பா

        சங்குவ லம்புரிசூழ் செந்தில்வ ளம்பதியாய்
            தாலோ தாலோலோ
        சங்கரி தன்குமரா மங்கையர் தங்கணவா
            தாலோ தாலேலோ.